Tuesday, January 21, 2014

இலங்கைத் தமிழர் நலன் வேண்டி... உண்ணி கிருஷ்ணன்

இலங்கை கதிர்காம முருகனுக்கு புதிய பாடலை வெளியிடுகிறோம்.

கானாஞ்சலி கிரிதரன் அவர்களின் இசையில், புராண நிகழ்வுகளுடன் நிகழ்கால வலிகளை சற்றே இணைத்து, வேண்டுதலுடன் பாடலை எழுதியிருக்கிறேன்.

உணர்ச்சிகளை நுணுக்கமாக வெளிப்படுத்திப் பாடியிருக்கிறார் உண்ணி கிருஷ்ணன்.

விரைவில் வெளியாகும் ‘அம்பிகை பாலா கார்த்திகை ராசா’ முருகன் இறையிசை ஆல்பத்தில் இப்பாடல் இடம் பெறும்.

Youtube-ல், ஒரு கோர்க்கப்பட்ட வீடியோவின் பிண்ணனியில் இப்பாடல் ஒலிக்கிறது.

பல்லவி
குமரா கடம்பா கதிர்காம தலவாசா
கருணா கருத்தா கடல்தேசம் காப்பாயா

வள்ளிமலை பிம்பமும் நீயே
அகதிகள் கதிரொளியாய் நீயே
அருள்வாயா

சரணம் 1
சூரனை வெல்ல பாசறையைக் கொண்டாய்
தேவரையும் சயந்தனையும் மீட்டாய்

யந்திரமாய் மந்திரமாய் அமர்ந்தாய்
சமயங்கடந்து யாவருமுனைத் தொழுதார்

பிரிவினை நினைந்து போர் கண்டார்
வலியாற்றாமல் உயிர்கள் சிதைத்தது ஏனோ

சரணம் 2
அனுமனை நீ சீதையிடம் சேர்த்தாய்
வேழனை வேண்டி வள்ளியை மணந்தாய்

தவிக்கும் தமிழன் புணர் வாழ்வைத் தருவாய்
முள்ளியில் நீ விடி வெள்ளியாய் முளைப்பாய்

மனக்களின் விருப்பம் அறிந்தவன் நீ
இனங்களில் இணக்கம் கொணர்வாயே முருகா

தொகையறா
கந்தனுக்கு வேல் வேல்
சூரனுக்கும் வேல் வேல்
யாவருக்கும் வேல் வேல் வேல்

சரணம் 3
வேடரை நீ சொந்தமாய்க் கொண்டாய்
தினையினை நீ படையலாய் உண்டாய்

மீனவர் ஏங்கும் தீர்வினைத் தருவாய்
படைகளைப் போக்கி கலைகளை வளர்ப்பாய்

எளியவர் மனதில் வாழ்பவன் நீ
எழில்நிலம் ஒன்றாய் வாழ வழி செய்வாயா


No comments:

Post a Comment

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...